வாசிப்பதை விட அதிகம் எழுதிக் கொண்டிருந்த ஆள் நான். எழுதும் அளவுக்கு வாசிப்பதில் ஆர்வமும் இருக்க வில்லை. இருக்க வில்லை என்றில்லை. எழுதும் அளவுக்கு இருக்க வில்லை. முதற் சிறுகதை எழுதி முடித்த போது, சில சிறுகதைகள் படித்திருந்தேனே ஒழிய, சிறுகதைத் தொகுப்பு என்று முழுதாய் ஒரு நூல் கூட முடித்ததில்லை. வார இதழ்களில் தொடர்கள் படிப்பது பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால், அதற்கு வாராவாரம் இதழ் வாங்க வேண்டியிருக்கும். நாவல் என்ற படிவம் படைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. முடியுமா என்ற நம்பிக்கை இல்லை. அவற்றைப் படிக்கவும் நிறையப் பொறுமை வேண்டியிருக்கும் என்றெண்ணி அவற்றின் பக்கமும் போவதே இல்லை. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் எழுத்து வடிவங்களிலேயே மேலானது வரலாற்று நாவல்கள்தான் என்று சொல்லி அவற்றைப் படித்து முடித்திருந்த நண்பன் மணிகண்டன் வந்து கல்கியின் சில நாவல்களைப் படிக்கச் சொன்னான். படித்த முடித்த போது எனக்கும் கிட்டத்தட்ட அந்தக் கருத்தில் ஏற்பு ஏற்பட்டது. பார்த்திபன் கனவில் ஆரம்பித்து, பொன்னியின் செல்வன் படித்து, அதன் பின்பு படித்ததே சிவகாமியின் சபதம். பார்த்திபன் கனவு குறிப்பு எடுத்ததாக ந...
கருத்துகள்
கருத்துரையிடுக