பலசாலி

தனி ஆளாக
நாலு பேரைக் கூடச்
சாய்த்து விடுவார்
கருப்புச் சித்தப்பா

எவருக்கும் பயப்படாத
ஏட்டையா கூட
அவரைக் கண்டால்
பயப்படுவார்

அவரைவிடப் பலசாலி
எவரையும் நான்
இதுவரையும் கண்டதில்லை

முரட்டுப் பூனைக்கு
மணி கட்டப் போகும்
மணிகண்டன் யாரோ என்று
ஊரே காத்துக் கிடந்தது

சித்தப்பா
இன்று
வீடு திரும்பி வந்து
கதவைப் பூட்டிக் கொண்டு
கதறிக் கதறி அழுகிறார்

போன வருடம்
வெளியூரிலிருந்து
வேலைக்காக வந்து குடியேறிய
ரமேஷ் சார்
தன்மையானவர்
பயந்த சுபாவம்
எப்போதும் சிரித்த முகம்
யாரோடும் அதிர்ந்துகூடப் பேச மாட்டார்

எங்கோ
ஏதோ
எழுதிப் போட்டு
இவருக்கும்
இவர் போலப் பலருக்கும்
வேலையே இல்லாமல் செய்து விட்டாராம்...
தனி ஆளாக...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி