வரலாறு

உன் முன்னோர்கள் எல்லோரும்
நான் படித்த வரலாற்றில்
நாயகர்கள்

அவர்களை
அப்படிக் காட்டிய பெருமை
உன்னையே சேருமென்றார்கள்

அது எனக்குப் புரியவில்லை

நான் பார்த்த வரலாற்றில்
பலருக்கு நீ நாயகன்
பலருக்கு நீ பாவி

உன் காலம் முடிந்தபின்
என் பிள்ளைகள் படிப்பதற்காக
எழுதப்பட்ட வரலாற்றில்
நீயும்
கேள்விகட்கப்பாற்பட்ட நாயகனாக
உயர்ந்து நிற்கிறாய்

அவர்கள் படிக்கும் வரலாற்றை
நான் பார்த்த வரலாறு கொண்டு
கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன்

ஆனாலும்
அதற்கெல்லாம் எங்கே
நேரமிருக்கிறது?

இருந்தாலும்
இதெல்லாம்
நான் படித்த வரலாற்றையும்
கேள்விக்குட்படுத்த உதவியிருக்கிறது
நன்றி நாயகா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி