கடைசி விடை

மனிதனுக்கு
பிரபஞ்சத்தைப் பற்றி
ஏகப்பட்ட வினாக்கள்

தன்னைப் பற்றி
அதை விட அதிகமான வினாக்கள்

விடையளிக்கப்படாத வினாக்களுக்கெல்லாம்
ஒரே விடையாய்
உயர்ந்து நிற்கிறார்
கடவுள்

வந்து சேரும்
ஒவ்வொரு விடையும்
அவரின் உயரத்தைக்
குறைக்க முயல்வதும்

எழுப்பப்படும்
ஒவ்வொரு புது வினாவும்
மீண்டும் அவரை
மேலே ஏற்றுவதுமாக
நீண்டுகொண்டே இருக்கிறது
விவாதம்

கடைசி வினாவும்
எழுப்பப்பட்டு
அதற்கான விடையும்
விளக்கப்படும் வேளையில்தானே
கடவுளுக்கும்
அறிவியலுக்கும்
வேலை முடியும்

அதற்குப் பின்னும்
மனிதனுக்கு மட்டுமா
வேலை இருந்துவிடப் போகிறது
பிரபஞ்சத்தில்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி