மூச்சுக்கும் எழுத்துக்கும்...

எத்தனை பெண்கள்?
எத்தனை கதைகள்?
ஒரு சொல் கூட
உள்வாங்க வில்லையே!

ஏன்
நீ பேசும்போது மட்டும்...
பேச்சுக்கிடையிலான
மூச்சில் கூட
பொருள் தேடுகிறேன்?

ஏன்
உன் கடிதங்களில் மட்டும்...
ஒவ்வொரு எழுத்துக்கும் கூட
பொருளிருக்கும் என்றெண்ணி
புலம்பித் தவிக்கிறேன்?

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி