கலப்புப் பொருளியல்

வேலை செய்து
வயிற்றை நிரப்பென்றால்
ஏமாற்றப் பட்டோர்
எல்லோரும் ஏழ்மையில்...
முதலாளித்துவம்!

வயிற்றை நிரப்பிவிட்டு
வேலை செய்யென்றால்
ஏமாற்றுகிறார்
எல்லோரும் சோம்பலில்...
சமதர்மம்!

இரண்டும் கலந்து உருவான
எங்கள் கலப்புப் பொருளியலில்
வீடும் வேண்டி
விடுதலையும் வேண்டி
சோறும் வேண்டி
சுதந்திரமும் வேண்டி

இறுதியில்
எல்லாம் இழந்து
எங்கள் நாடு மட்டும் இருக்கிறது

பழைய ஈயம் பித்தாளைக்கு
பேரீச்சம்பழோய்...

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி