ஆமாம், நீ சொன்னது சரிதான்!

எத்தனை கேலி?
எத்தனை கிண்டல்?
எத்தனை விமர்சனம்?
எத்தனை கண்டனம்?
எத்தனை ஏளனம்?
மனம் ஆனது ரணம்!

கடைசியில் கிடைத்த
"ஆமாம், நீ அன்றே சொன்னாய்!"
ஒப்புதல்களில்
கவலை மறந்து
பெருமிதம் மேலிடுகிறது

ஆனாலும்,
தெளிவாகச் சிந்திந்து
நடைமுறைச் சிக்கல்கள் ஆராய்ந்து
கவனத்தோடு சொன்ன கருத்துக்கும்
வெளிப்படையாய்ப் பேச விரும்பிய நேர்மைக்கும்
ஏற்பட்ட இடைக்காலக் காயங்களை
எப்படி ஆற்றப் போகிறீர்கள் இப்போது?

* 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி