நான்?

கண்ணும் கண்ணும் உண்ணும் கதைகள்
சைகை மொழி மின்சாரப் பாய்ச்சல்கள்
உணர்ச்சிச் சிலிர்ப்புகள்
இளமைச் சிமிட்டல்கள்
எல்லாமே அர்த்தமிழந்து போகின்றன
செயற்கைக் கோள் பிடித்த
உலகப் படங்களைக் காணும்போதெல்லாம்

உருப்பெருக்கி உருப்பெருக்கி
என் நாட்டைக் கண்டுபிடித்து
என் நகரத்தைக் கண்டுபிடித்து
என் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து
அடையும் மகிழ்ச்சியில் உணர்கிறேன்
எத்தனை சிறியதொரு புள்ளி
இந்தப் பிரபஞ்சத்தில் நான்!

கோடானு கோடி உயிரினங்களில்
நாயும் மாடும் போல
நானும் ஒரு மிருகந்தானே?

இயக்கமும் சப்தமும்
இன்னும் பல கடமைகளும் கொண்ட
இன்னோர் இயந்திரந்தானே நானும்?

* 2002 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி