இறை விபத்துகள்

தண்டவாளங்களிலும்
தார்ச்சாலைகளிலும்
சிதைந்து போன
மனிதர்கள்
குடும்பங்கள்
அர்த்தமிழந்து போன
அவர்களின் கனவுகள்
ஆசைகள்
ஆவியாய் அலையும்
ஆன்மாக்கள்

நிகழ்ந்ததை
நேரில் பார்த்து
நிலைகுலைந்த மனநிலையோடு
பைத்தியமாய் அலையும்
பாவப்பட்டவர்கள்

விபத்துக்களால்
வித்துக்களே
வீழ்ந்தழிந்த
வேதனைகள்தான் எத்தனை?!

நீ படைத்த
நீ நிர்வகிக்கும்
இவ்வுலகில்
அத்தனையையும்
அமைதியாக
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
எங்கள் இறைவா
இருப்பது உண்மையானால்
எமக்கொரு வரம் கொடு...

குறைந்த பட்சம்
உன்னைத் தரிசிக்க வரும்
பக்தர்களையாவது
பாதுகாப்பேனென்று
உறுதி கொடு!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி