பொன்விழா தேசம்

பொன்விழாக் கொண்டாட்டங்கள் கோலாகலப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

சுதந்திரமும் தியாகமும் பொருள் மாறி விட்ட இரு சொற்களாகி விட்டன எம்மொழியில்.

வறுமையும் ஊழலும் இன்னும் விக்கெட் இழக்காமல் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

உச்சி வெயிலில் உழுது விதைத்து, விவசாயம் செய்து, வியர்த்துக் களைத்தவனின் வீடுகளில் இன்னும் வெளிச்சம் வரவில்லை.

'இந்த தேசத்தில் உடலுழைப்புக்கு மதிப்பில்லை' - உண்மையை உணர்ந்தவர்கள் தொழிலை மாற்றி விட்டதால் காவல் துறைக்கு இன்னும் ஆட்கள் தேவை.

வேலையில்லாதவர்கள் சாதிக் கலவரத்தை முன்னின்று நிர்வாகம் செய்கிறார்கள்.

உருப்படாத கல்விமுறையைப் பின்பற்றி, மாணவன் மிருகமாகி, 'ராகிங்' கொலைகள்.

அடிப்படைத் தேவைகளே பூர்த்தி செய்யப் படாத தேசத்தில், அணுகுண்டு வெடித்ததை ஆரவாரித்துப் போற்றும் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாதவனும் உடன் சேர்ந்து கூச்சல் போடும் அறியாமை.

கிரிமினலுக்கு அர்த்தம் அரசியல்வாதியாம்.

ஊழலை விசாரிக்கச் செய்த செலவுகளின் கூட்டுத் தொகை ஊழலால் இழந்ததை விட அதிகம். அது தேசத்தின் கடனை விட அதிகம் என்றொரு புள்ளிவிபரம் வராதவரை நல்லது.

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி