நேற்று இன்று நாளை

கசந்து கிடந்த
கடந்த காலமும்
களிப்பூட்டுகிறது
நினைத்துப் பார்க்கையில்...
களிக்கும் வகையில்
நினைத்துப் பார்ப்பதால்!

என்னவென்றே தெரியாத
எதிர் காலமும்
இனிக்கிறது
எண்ணிப் பார்க்கையில்...
இனிக்கிற மாதிரி
எண்ணிப் பார்ப்பதால்!

ஏன்
இன்று மட்டுமே
என்றுமே போராட்டமாய் இருக்கிறது?

போராடும்படி வாழ்வதாலா?
போராட்டமாய் உணர்வதாலா?

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி