தேசத்தின் தலைவிதி

ஒரு தேசத்தின் தலைவிதி
தீர்மானிக்கப் படுவது
பாராளுமன்றத்தில் மட்டுமல்ல...
பாடசாலைகளிலும்தான்!

பேரம் பேசி
விலை கொடுத்து
வேலை வாங்கியவர்
சம்பளத்தை வாங்கிக் கொண்டு
பாடங்களை வாசிக்கிறார்!

வாசித்ததை மனப்பாடம் செய்து
பேனாவால் ஒப்புவித்தலுக்கு
மதிப்பெண் அளிப்பதன் மூலம்
அறிவாளிகளைக் கண்டுபிடிக்கும்
இந்தக் கல்விமுறையில்
தேறுவது கடினமென்று அறிந்தவர்
காசு கொடுத்து வாங்கலாம் கல்வியை!

அதுவுமில்லாதவர்
'அம்போ'வென்று அலையலாம்!

வாசிக்கும் வாத்தியார்கள்...
மனனிக்கும் மாணவர்கள்...

இந்தியாவின் எதிர்காலம்
இவர்களால்தான்
இயற்றப் பட வேண்டுமாம்!

தேசத்தை விற்று விடாதீர்
புத்திமான்காள்!
இது கல்வி அல்ல...

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி